கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 30 March 2021

வாக்குச்சாவடியில் வழங்கும் கொரோனா தடுப்பு பொருட்களும், அதனை பயன்படுத்தும் முறைகளும்

சமையலர் பணியில் இருந்தவர்களை PO - 2 ஆக நியமனம் செய்தவர்களை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று தேர்வு பணியிலிருந்து விடுவித்த நமது பேரியியக்கத்தின் மாநிலச் சட்ட செயலாளர் சாமி அவர்களை அலுவலர்கள் நெஞ்சம் நிறைந்து பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் சமையலருக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க முடிவு - மாவட்ட ஆட்சியர் முடிவு. முயற்சி எடுத்து வெற்றிகண்ட நமது மாநில சட்ட செயலாளர் திரு. சாமி அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்

Sunday, 28 March 2021

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!* -தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் சாமி அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பெண் ஆசிரியர் களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர்.மாவட்ட ஆட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளிப்பு



*திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!*

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்புகளில் po 1 இந்தி பேசுபவர்களும்,  po2 வாக சத்துணவு ஆயாக்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்,  po 3 ஆக இந்தி பேசும் ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

 இதைத்தொடர்ந்து அந்தந்த தொகுதிகளில் பயிற்சி பணிக்கு சென்றிருந்த சத்துணவு  ஆயாக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஹிந்தி பேசுபவர்கள் ஆகியோர் தங்களால் இந்த பணியை செய்ய இயலாது என்பதை வலியுறுத்தி அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டனர்.

 இருப்பினும் இந்த பணிகளை நீங்கள் தான் செய்ய வேண்டுமென தொகுதி தேர்தல் அலுவலர்கள் பதில் அளித்து திருப்பி அனுப்பி விட்டனர்.

 இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் PRO ஆகியோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

 இதைத்தொடர்ந்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் நமக்கு தொலைபேசி மற்றும் வாடஸ் அப் மூலமாக எங்களால் இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு எப்படி தேர்தல் நடத்த முடியும்? எங்களால் முடியாது, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் .26-ம் தேதி இரவு முழுவதும் தூக்கமில்லை.

 எனவே மாவட்ட ஆட்சியரிடம் பேசி மாற்று ஏற்பாடு செய்து தருமாறு அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்களின் சங்க நிர்வாகிகளான மாவட்ட தலைவர் கே. ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஈ.அருள், மாவட்ட பொருளாளர் டி. தணிகாச்சலம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கே.பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.வெங்கடேசன் மற்றும் மாநில சட்ட செயலாளர் சாமி ஆகியோரிடம் நுற்றுக்கணக்கான ஆசிரியர்கள் முறையிட்டனர்.

 இவர்களது கோரிக்கைகள் நியாயமானதே என்பதை உணர்ந்த சங்க நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்திக்க 27 3 2021 அன்று முடிவெடுத்தனர்.  

இதற்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர்.

 இதற்கிடையில் மன உளைச்சலுக்கு ஆளான அனைத்து ஆசிரியர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருமாறு நமது நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எவரும் ஆட்சியரை சந்திக்க முன்வரவில்லை.

 இருப்பினும் நமது சங்க நிர்வாகிகள்,   சத்துணவு அமைப்பாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவி லட்சுமி மாவட்ட தலைவர் எம். டி. மணிமேகலா  ஆகியோரை மாநில சட்ட செயலாளர் சாமி அவர்கள் வரவழைத்து மாவட்ட ஆட்சியரை 27 .3 .2021 அன்று மாலை 6 .40 மணி வரை காத்திருந்து  சந்தித்தனர்.

 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், சத்துணவு  சங்க நிர்வாகிகள் அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் ஆட்சியர் திரு பொன்னையா அவர்களை சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும்  முன்  வைத்தனர.

 இதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில், 

 po 2 பணியில் நியமிக்கப்பட்ட சத்துணவு ஆயா, அங்கன்வாடி ஊழியர்கள்,  இந்தி பேசுபவர்கள் அனைவரின் விவரங்களை விரைந்து யூனிட் நம்பருடன் அளித்தால் உடனடியாக மாற்றி தருமாறு உறுதியளித்துள்ளார்.


 மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பெண் ஆசிரியர்களே என்பதால் அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளையும் செய்து தருமாறு சங்கத்தின் சார்பில் அன்பு வேண்டுகோள்  விடுத்தபோது, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஆட்சியர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

 மேலும் 6.4.2021 ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அன்று இரவு தேர்தல் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல நடு இரவு நேரமாகிவிடுவதால் அனைத்து தேர்தல் அலுவலர்களும் மறுநாள் 7.3. 2021 அன்று காலை வீடு திரும்பக் கூடிய நிலை உள்ளது .

ஆகவே 7.3 2021 அன்று விடுமுறை அளிக்குமாறு ஆட்சியரிடம் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

 இதற்கும் ஆட்சியர் அவர்கள் விவரங்களை பெருந்தன்மையுடன்  புரிந்துகொண்டு விடுமுறை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார் என்பதை பெருமையுடன் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

 இதுபோன்ற விஷயங்களில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள் தலைமையிலான சங்கம் என்றென்றும் உறுதுணையாக இருக்கிறது என்பதை அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் உணர வேண்டும் என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 நன்றி 

*உங்கள் சேவைக்காக*
*என்றென்றும்* 

சாமி

Friday, 26 March 2021

நிறுவனர் டாக்டர் அ.மாயவன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் திண்டுக்கல் முனைவர்.மு.முருகேசன் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றிய போது*

" 9,10 11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, ஆசிரியர்களை சுழற்சி முறையில் பணிக்கு அழைக்க வேண்டும்" என்று நாம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி.

📌📌📌📌📌📌📌📌 *தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணி ஏப்ரல் 2021 தேர்தல் நடத்தும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரவேண்டி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு இன்று (26.3.21)மாலை சரியாக 5.30 மணி அளவில் நமது சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட நிகழ்வு*📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌

Wednesday, 24 March 2021

PAN கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் மார்ச்.31.

Last date to link Aadhaar card and PAN on March 31.

If already link, to know the status or you can want to link Aadhaar card to Pan.

Check below link

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html

Monday, 22 March 2021

: 9, 10 , 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி!ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய மறுப்பு



 : 9, 10 , 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி!

ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய மறுப்பு

law

9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவு - ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

10ஆம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம்-உயர்நீதிமன்றம்

ஆல் பாஸ் உத்தரவு தொடர்பாக அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்

 

Tuesday, 16 March 2021

தபால் ஓட்டுக்களை போட முறையாக அனுமதிக்க வேண்டி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து நமது பேரியியக்கத்தின் கோரிக்கைகளை அளித்தார்-நமது மாநில பொதுச்செயலாளர் சா.சேது செல்வம் அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்


🙏👍💐 இன்று சிவகங்கையில் 16.3.2011 மாலை 5.30 மணிக்கு சிவகங்கை மதிப்பு மிகுமாவட்ட ஆட்சித் தலைவரை  வரும் சட்டமன்றத் தேர்தலை சிறப்பாகவும் - தபால் ஓட்டுக்கள் அனைத்தும் முறையாக வாக்களிக்க வாய்ப் பளிக்கவும் வேண்டி  மாநில _ மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திந்த இனிய நிகழ்வு.

நம் கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாக பரிசீலித்து கனிவுடன் ஏற்றுக் கொண்டார்.        தேர்தலை சிறப்பாக நாம் அனைவரும் இணைந்து பொறுப்புடன் - நடத்துவோம் - என்றார்.
சந்திப்பு மகிழ்ச்சியாக நிறைவுற்றது.

திருவண்ணாமலையில் கீழ்பென்னாத்தூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கிய விழிப்புணர்வில் - நம் பேரியியக்கத்தின் மாநில துணை தலைவர் திரு.முருகன்

Monday, 15 March 2021

இரண்டாவது பயிற்சி வகுப்பின்போதே தபால் ஓட்டை பதிவு செய்யவும், கையெழுத்திடவும் கெஜட் அலுவலரையும் நியமித்து ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தமுடியும்? தி.மு.க தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கம் :


பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும் !!!. இச் செலவினத்தை புதிய தொழில் முனையங்கள்  உருவாக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டும்  கனிம வளத்துறை வாரியத்தின் மூலம் அரசு ஒழுங்குமுறை விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்தும் இச்செலவினம் ஈடு கட்டப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் !!!.
இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும் :


வேலூர் மாவட்ட மேனாள் தலைவர்.திரு.தாண்டவராயன் அவர்களின் புதல்வியின் நிச்சயதார்த்தத்தில் நமது பேரியக்கத்தின் மாநில பொருளாளர் ப.ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்



15.03.2021 இன்று தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மேனாள் மாவட்டத் தலைவரும் இந்நாள் ஒருங்கிணைப்பாளருமான திரு. P. தாண்டவராயன் அவர்களின் புதல்வியின் திருமண நிச்சயம் செய்யாறில் நடைபெற்றது.இந்நிகழ்வில் நமது பேரியக்கத்தின் மாநிலப் பொருளாளர் திரு.சி.ஜெயக்குமார் அவர்களும், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் திரு. M. தேசிங்குராஜன், மாவட்டச் செயலாளர் திரு. V.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் திரு R. துக்கன், வேலூர் மாவட்டத் தலைவர் திரு.M.S. செல்வகுமார், மாவட்டச் செயலாளர் திரு. A.திருஞான சம்பந்தம், மாவட்டப் பொருளாளர் திரு. J. காந்தி, இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் திரு.B. ஆதவன், மாவட்டச் செயலாளர் திரு.ரகுராமன், மாவட்டப் பொருளாளர் திரு.முருகானந்தம், மாவட்ட சட்டச் செயலாளர் திரு.சிவானந்தம், மேனாள் மாவட்டப் பொருளாளர் திரு.வெங்கடேசன் ஆற்காடு வட்டப் பொறுப்பாளர் திரு. K.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹*

Thursday, 11 March 2021

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பயிற்சி வழங்கப்பட்டதை அறிந்து உடனடியாக ரத்து செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாநில செயலாளர் சாமி அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முறையிட்டனர்.


*பட்டதாரி ஆசிரியர் நண்பர்களே வணக்கம்*

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் தேர்தல் பயிற்சி வகுப்புகளை ரத்து செய்து தருமாறு திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. முத்துசாமி அவர்களிடம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள் சார்பில் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மனு அளிக்கப்பட்டது.

 இதை பெற்றுக்கொண்ட அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் விடியோ வகுப்புகள் நடைபெறாது என்றும், விண்ணப்பம் 12 மட்டும் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு செல்லலாம் என்றார்.

 அடுத்த பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறாது என உறுதி அளித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்த சந்திப்பின்போது மாவட்ட தலைவர் கே. ஜெயராமன், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் த.பாஸ்கரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன்,  வட்ட நிர்வாகி உமா சங்கர் மற்றும் மாநில சட்ட செயலாளர் சாமி இருந்தனர்.

Tuesday, 9 March 2021

இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.pay matrix இல் உச்ச பட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்

தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விதிகள், 2017 - ஒரு நபர் குழுவின்  பரிந்துரைகளை அமல்படுத்துதல் - ஊதிய நிலை ஆணைகளில் கூடுதல் கலங்களை உருவாக்குதல் (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) - அரசாணை வெளியீடு!!!_*


இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
pay matrix இல் உச்ச பட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில துணை தலைவர் ஏ.முருகன் அறிக்கை

Monday, 8 March 2021

ஊக்க ஊதிய உயர்வு களுக்கு நிதித் துறை ஒப்புதல் அளிக்க வேண்டி நிறுவனர். Dr. மாயவன் அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தினமலர் நாளிதழுக்கு கொடுத்த பத்திரிக்கைச்செய்தி

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலரைசந்தித்த தருணம்

மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேலாக இருக்கும் பெண்கள் முழுமையாக தீவிர அரசியலில் ஈடுபடாத வரையில் நாட்டில் எந்த விதமான புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர முடியாது.


மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேலாக இருக்கும் பெண்கள் முழுமையாக தீவிர அரசியலில் ஈடுபடாத வரையில் நாட்டில் எந்த விதமான புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர முடியாது.ஆகவே பெண்களை அரசியல் படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபடுவோம் என்று இன்றைய மகளிர் தின நன்னாளில் சபதம் ஏற்போம்.இதற்கான பணிகளில் இன்று முதல் முழுமையாக ஈடுபடுவோம்

Sunday, 7 March 2021

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் முனைவர்.அ.மாயவன் அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் திண்டுக்கல் முனைவர்.மு.முருகேசன் விடுத்த பிறந்தநாள் வாழ்த்து மடல்



🌹 *எம் தலைவருக்கு நான் விடுத்த பிறந்த நாள் வாழ்த்து மடல்* 🌹
    
🎁🎁🍓🍒🍎🎁🎁இன்று 7.3.2021 அன்று 75-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்நாடு
உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் *முனைவர் அ.மாயவன் Ex.MLC* அவர்களே.... 

❤️ *நாளைய ஆட்சி மையத்தை தமிழகத்தில் அரங்கேற்ற இருக்கும் அருமை தலைவரே* 

*💥அதிகாரமய்யத்தின்*  *ஆணிவேரை* *அசைத்திட்ட சூறாவளி*

*💥ஊன் வருத்தி உயிர் வருத்தி மாணவர்நலன் ஆசிரியர்* *நலன்களுக்காக* *நித்தம் உழைத்திடும்* 
*ஓய்வறியா போராளியே*

*💥தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்  தன்னிகரற்ற ஆளுமையை மீண்டுமொருமுறை வலுவாக நிரூப்பித்தவரே*

*💥அஞ்சாமை, எதிர்க்கும் துணிவு, தளராத ஊக்கம், அறத்தின் மேல் கொண்ட பற்று இவையனைத்தும் ஒருங்கே பெற்ற நிறுவனர் முனைவர்.அ. மாயவன் Ex.MLC அவர்களே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்னும் அறிவிப்பை பெற்றவரே.*

*💥தேர்வு ரத்துக்கு வேறு எவரும் சொந்தகொண்டாட இயலாது என நிறுவித்தவரே. ஏனெனில் திறத்துடன் நீதியின் கதவுகளை தட்டிக்கொண்டே இருந்தத மாயவன் அவர்களே*

*💥 மாணவர்கள்,ஆசிரியர் மேல் கொண்ட  அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வுமே இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என  போற்றப்பட்டவரே.*

*💥10லட்சம் மாணவர்கள்,*
*3லட்சம் ஆசிரியர் மற்றும்* *அரசுப்பணியாளர்கள் நலனை காப்பாற்றியவரே*

*💥'தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை பரவலாக  எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்திய போதும்*

*💥அஞ்சாமல் கண்துஞ்சாமல் அநீதிக்கு எதிராக வழக்கு தொடுத்து களத்தில் நின்று போரிட்டு வெற்றியை ஈட்டித் தந்த எங்கள் தகப்பனே*

🍓 *இயக்ககத்தின் சாகப்தமே* ....

🍒 மரியாதைக்குரிய *முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரே..* ..

🔥 ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் *மாநில ஒருங்கிணைப்பாளரே* 

🎁பட்டதாரி ஆசிரியர்களின் *பாதுகாவலனே* .....

🍎720 G.O.வை மாற்ற விடாமல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான *தலைமை ஆசிரியர்களை உருவாக்கி அழகு பார்த்த* மாபெரும் தலைவனே....

🍓 *எளிமையின் சிகரமே* ....

🎁தமிழகத்தின் *40000 பட்டதாரி ஆசிரியர்களின் தலைவரே...* 

🎁1,75,0000 ஆசிரியர்களைக் கொண்ட அகில இந்திய ஆசிரிய கூட்டமைப்பின் அன்பைப் பெற்ற *வரலாற்றுத் தலைவரே..* 

🎁சென்னையிலே தனியார் பள்ளி ஆசிரியை திருமதி. உமா மகேஸ்வரி  மாணவனால் குத்தி கொலை செய்யப்பட்டபோது அவர் பெற்ற இரண்டு பெண் குழந்தைகளை அழைத்து ஐந்தரை லட்சம் வழங்கி அன்று வாழவைத்து - இன்று போற்றுதலுக்குரியவர்களாக மாற்றிய *எம் குல தெய்வமே* 

🎁சென்னையிலே உடற்கல்வி ஆசிரியர் தாக்கப்பட்டபோது ..கூலிப்படையை ஏவி தாக்கிய செல்வேந்திரனை 24 மணி நேரத்தில் காவல் துறையால் தூக்கியவரே.....

🌹அன்பு காட்டுகையில்
அன்னையாய்
அறிவுரை கூறுகையில்
 *தந்தையாய்* 
நெறிப்படுத்துகையில்
நல்லாசானாய்
துன்பம் நேர்கையில்
தோழனாய்
அநியாயங்களை தட்டி கேட்பதில்
வீரனாய்
குறும்புகளை ரசிப்பதில்
குழந்தையாய்
புன்சிரிப்புடன் - என்றும்
உலா வரும்
 *எம் தலைவனுக்கு* 
 *பிறந்த நாள்* ..... *இன்று* 

🌹வெற்றியாளர்களை
உருவாக்குகின்ற
 *சாதனையாளருக்கு* 
 *பிறந்த நாள்..... இன்று* 

🌷 *CPS -* யை ஒழித்து
 *GPF* - யை பெற்று தரப்போகும்
 *எம் தலைவனுக்கு* 
 *பிறந்த நாள்..... இன்று* 

🌹 *2004 முதல் 2006* வரையிலான
தொகுப்பூதியகாலத்திற்கு
காலமுறை ஊதியம்
பெற்றுத் தரப்போகும்
 *எம் தலைவனுக்கு* 
 *பிறந்த நாள்... இன்று* 

🌹பட்டதாரி ஆசிரியர்களின்
பாதுகாவலன்
உத்தம தலைவன்
 *ஓய்வறியா உழைப்பாளியே* 

📌 *சமசரமற்ற போராளியே* 

📌 *எளிமையின் சின்னமே* 

📌 *தமிழக பள்ளி கல்வி வளாகத்தில் (DPI)* இருக்கற ஒவ்வொரு படிக்கட்டும் உம் பெயர் சொல்லும் *கரை படியா தங்கம் மாயவன் என்று*

🎁ஒரு நபர் குழுவில் PG க்கு நிகராக தரவூதியம் 200 பெற்று 4400 லிருந்து 4600 பெற்று தந்தவரே....
சங்கம் பாராது ஆசிரியர்களுக்கு உதவும் அப்பழுக்கற்ற தலைவரே....

🍒 உம்மை என்னவெல்லாம் சொல்லி வாழ்த்துவது
 நோயற்ற வாழ்வும் ,குறைவற்ற செல்வமும் பெற்று நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு குடும்பத்துடனும் எங்களுடனும் வாழ வேண்டுகிறேன்🙏🙏🙏

🔥 *என்னையும் போராளியாக்கி அழகு பார்த்த* *எங்கள் தெய்வம்* நூற்றாண்டுகள் உடல் நலமோடு ஆசிரியர் நலனில் பணியாற்ற வேண்டுமாய்  இன்றவனிடம் ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் நிறைந்து வேண்டுகிறேன்🙏🙏🙏

இவண்

 *என்றும் என் ஆசான் வழியில்*

திண்டுக்கல் முனைவர்.மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்