Friday, 6 August 2021
Wednesday, 4 August 2021
இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு சுதந்திர தினத்தன்று அறிவிக்க இருக்கிறது
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ,1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று பெண்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இத்திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய முற்படுவதாக தகவல்கள் வருகின்றன. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டாம் எனவும் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் சக்கரபாணி அண்மையில் அறிவித்திருந்தார்.
Subscribe to:
Posts (Atom)