கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 25 April 2021

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தமிழாசிரியர் பலி- நம்பேரியியக்கம் கண்ணீர் அஞ்சலி


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர் திருமதி. சத்தியபாமா. இவர் அங்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

 கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு பரிசோதனை. செய்த போது அவருக்கு கரோணா  தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தது.

 அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

அவரது சடலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

*அன்னாரின் மறைவுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.*

 இவண்.. 

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக* *நிறுவனத் தலைவர் டாக்டர் அ.மாயவன்* *எக்ஸ்எம்எல் சி மற்றும்*
*மாவட்ட நிர்வாகிகள்*.

No comments:

Post a Comment