நானும் எனது மகள் விதுலா ஸ்ரீ முருகேசனும் இன்று 23.04.2021 மதுரையில் ஒரு விழாவில் கலந்துவிட்டு திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா இரவு 10.40க்கு வந்தபோது ஒரு காவல்துறை அதிகாரி அவர்கள் ஒரு முதியவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். இரவு லாக்டவுன் என்பதால் கடை. ஆளுக, வாகனம்னு இல்லாம இருண்டு கிடந்தது. இவர் செய்யும் நற்காரியத்தைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி தைரியமாக எனது அருமை மகள் விதுலாஸ்ரீ எடுத்த போட்டோக்கள். இந்த காவல்துறை அதிகாரி கண்டிப்பா நகர் தெற்கு அல்லது நகர்வடக்கு காவல் நிலையமா இருக்கும்னு நினைக்குறேன். அதிகாரி அவர்களை நெஞ்சம் நிறைந்து வாழ்த்துங்கள்🙏🙏🙏
No comments:
Post a Comment