கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 14 April 2018

ஜாக்டோ ஜியோ தீர்மானம்..14.04.2018


இன்று (14.04.18)  மாலை 3.30 மணி அளவில்
ஜாக் டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில்
உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

1) 32 மாவட்டங்கள் 11மண்டல அளவில் பிரிக்கப்பட்டுள்ளது.

2) வரும் ஏப்ரல் 18 மற்றும் 19 தேதிகளில் மாவட்ட  அல்லது மண்டல அளவிலான கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

3) 23.4.18 முதல் 27.4.18 வரையிலான 5 நாட்களில் ஜாக்டோ ஜியோ இனைந்து
வேன் பிரச்சாரம் செய்ய வேண் டும்

.4) மே 3 & 4.5.18
ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள் இனைந்து சென்னை யில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

5) திருநெல்வேலி யில் தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் முருகன் என்பவரின் பணியிடை நீக்கம் ரத்து செய்ய வலியுறுத்தி  20.04.18 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும்.

6) 8.5 18 அன்று சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துதல்.

7) மாணவர்கள் நலன் கருதி +2 மற்றும் 10 ம் வகுப்பு  விடைத்தாள் திருத்தும் பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு  எடுக்கப்பட்டது.

நிறுவனத் தலைவர் அ.மாயவன் அவர்கள் மண்டல ஒருங்கிணைப்பாளராக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நியமனம்
   
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
மாநில அமைப்பு

No comments:

Post a Comment