கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 12 May 2021

சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு.மா. சுப்பரமணியனை நம் பேரியியக்கத்தின் மாநிலத்தலைவர்.திரு.சு.பக்தவச்சலம் உள்ளிட்ட சென்னை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை அளிப்பு



*தமிழ்நாடு உயர்நிலை* - *மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* .
=================================
 *நிறுவனர் Dr.அ. மாயவன் Ex.MLC* 
=================================

 *நாள் :13.05.2021*
 *மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களை*  நம் பேரியக்கத்தின் நிறுவனர் முனைவர் 
*அ. மாயவன் Ex.MLC* அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று   மாநிலத்தலைவர் *திரு.S.பக்தவச்சலம்* தலைமையில் 
மாவட்ட தலைவர் *திரு.கா.சாந்தகுமார்*, மாவட்ட செயலாளர் *திரு.அ.சீனிவாசன்*
 மற்றும் சென்னை மாவட்ட செய்தி தொடர்பாளர் 
*திரு. கோ.குமார்*, மாவட்ட துணைத்தலைவர் *திரு. மோகன்*,  ஆகியோர் இன்று  காலையில் சந்தித்து இயக்கத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
*ஜாக்டோ ஜியோ எடுத்த முடிவின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடத்தம் செய்ய விரைந்து அரசாணை பிரபக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது*

    *கொரோனா தொற்றில் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் காப்பிட்டு திட்டத்தில் கொடுக்கப்பட்டது போல் NHIS திட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் எந்த மருத்துவ மனையிலும்  இலவசமாக சிகிச்சை பெற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.*

    *பெருவாரியான தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மரணமடைந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வீட்டிலும் மருத்துவமணைகளிலும் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்கள். ஆகவே ஆசிரியர்களை  (TTC) கொரோனா தடுப்பு பணிக்கு கட்டாயபடுத்தாமல் விருப்பமுள்ளவர்களை பயன்படுத்தி கொள்ளுமாறு பேரியக்கத்தின் சார்பில் கோரிக்கைகள்  வைக்கப்பட்டது*
இவண்.
*கோ.குமார்*
 மாவட்ட செய்தி தொடர்பாளர்
 *தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* 
சென்னை மாவட்டம்.

No comments:

Post a Comment