கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 11 May 2021

அறநிலைத்துறை அமைச்சர் மாண்புமிகு.சேகர்பாபு வை- நம் பேரியியக்கத்தின் மாநிலத் தலைவர் திரு.சு.பக்தவச்சலம் உள்ளிட்ட சென்னை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.


*தமிழ்நாடு உயர்நிலை* - *மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* .
=================================
 *நிறுவனர் Dr.அ. மாயவன் Ex.MLC* 
=================================

 *நாள் :11.05.2021* 

 சென்னை பெருநகர மாநகராட்சி கல்வித்துறை சார்பில் இன்று (11-5-21) முதல் TCC பணிக்காக ஆசிரியர்களை அழைக்க இருப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் நம் இயக்கத்தின்  மாநில தலைவர் திரு.S.பக்தவச்சலம் தலைமையில் மாவட்ட தலைவர் திரு.கா.சாந்தகுமார் மாவட்ட செயலாளர் திரு.அ.சீனிவாசன்
 மற்றும் சென்னை மாவட்ட செய்தி தொடர்பாளர் 
திரு. கோ.குமார் மாவட்ட துணைத்தலைவர் திரு. மோகன், மாவட்ட இணைச்செயலாளர் திரு.கண்ணன் ஆகியோர் இன்று  காலை மணி 7.30க்கு சென்னை மாநகராட்சியில் நடைபெறும் கொரானா பணிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் P.K.சேகர்பாபு அவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தோம். அமைச்சரிடம் நம் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு பணியின் போது  கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டதையும்,
தேர்தல் பணியின் போது கொரானாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையும் அவரிடம் எடுத்து கூறினோம்.  
இவண்.
கோ.குமார்
 மாவட்ட செய்தி தொடர்பாளர்
 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சென்னை மாவட்டம்.

No comments:

Post a Comment