கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 19 April 2021

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கரூவூலங்களில் உடனடியாக ஊதியம் வழங்கக் கோரி சென்னை நந்தனத்தில் உள்ள மாநில கருவூல இணை இயக்குநரை சந்தித்து முறையீடு.


தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் *முனைவர் அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி நம்பேரியியக்கத்தின் சார்பில் மாநில தலைவர் *S பக்ததவச்சலம* அவர்கள் தலைமையில் *சென்னை மாவட்ட நிர்வாகிகள்* இன்று *நந்தனம்* மாநில கருவூலகம் மற்றும் கணக்கு ஆணையரகம் இயக்குநர் மற்றும் இனை இயக்குநர் அவர்களை சந்தித்து தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் இன்றைய தேதி வரை பெற்று வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்கவும் நமது சங்கத்தின் சார்பில் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment