கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 27 February 2021

தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்த‌ சூழ்நிலையில், 28-02-2021 அன்று நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு குறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அவசர கூட்டம் இன்று 27-02-2021 காலை நடைபெற்றது.* *இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.**நாளை 28-02-2021 நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் எதிர்வரும் மே மாதத்தில் ஜாக்டோ ஜியோ கோரிக்கை ஏற்பு மற்றும் உரிமைகள் மீட்பு தொடர்பான வெற்றி மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.*இவண், மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

No comments:

Post a Comment