கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 20 April 2018

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாக ஆர்ப்பாட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முருகனுக்கு பணிவழங்க கோரி ......

அருமை உடன்பிறப்புக்களே கடந்த 2017 செப்டம்பரில் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ  போராட்டத்தில் நம்மோடு கலந்து கொண்டு  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் மோட்டார் வாகன பராமரிப்பு துறையைச்சார்ந்த  முருகன் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இன்று வரை (8மாதங்கள்) பணியில் சேராமல் அவரும் அவரது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜாக்டோ- ஜியோவின் வீரம் செறிந்த போராட்டத்தால்தான் இன்று புதிய ஊதியத்தை பெறுகின்றோம்  என்பதையும் அறிவோம். ஆனால் நமது உடன்பிறப்பு முருகன் புதிய ஊதியம் பெறவுமில்லை. கடந்த 8 மாதங்களாக ஊதியமும் பெறவில்லை. எனவே உடன்பிறப்புக்களே நமது உடன்பிறப்பு முருகனை மீண்டும் பணியமர்த்தக்கோரி இன்று (20.04.2018)வெள்ளிக்கிழமை  மாலை 5.30 மணி அளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற்றது

இவண்

மு.முருகேசன்
ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ-ஜியோ திண்டுக்கல்
மற்றும்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment