*மாநிலக் கழக மொத்த தீர்மான அறிக்கை*
*இடம்* : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மாநில பொதுக்குழு கூட்டம்
*நாள்* : 23.09.2018 (ஞாயிற்றுக்கிழமை)
தலைமை .. திரு *.சு.பக்தவச்சலம்* அவர்கள்
முன்னிலை : *முனைவர்.அ.மாயவன்* *Ex.*MLC* அவர்கள்
வரவேற்புரை : *எம்.சந்திரசேகரன்* கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்
செயல் அறிக்கை: திரு *.தி.கோவிந்தன்* அவர்கள்
வரவு செலவு தாக்கல்: திரு *.கே.ஜி.பாஸ்கரன்* அவர்கள்
*கிருஷ்ணகிரி* மாவட்டம் *போச்சம்பள்ளியில்* நடந்த நம்பேரியியக்கத்தின் மாநிலப் பொதுக்குழுவில் எற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க தீர்மானங்கள்👇👇👇
*1.* *புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து* பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும், 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உணடியாக வழங்கிட வேண்டும்.3000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி *04.10.2018* அன்று ஜாக் டோ_ ஜியோ நடத்தும் *ஒரு* *நாள் ஒரு சிறு விடுப்பு* போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதும் என்றும் *13.10.2018* அன்று சேலத்தில் நடக்க இருக்கும் ஜாக் டோ ஜியோவின் வேலை நிறுத்த *ஆயத்த மாநாட்டில்* பெருந்திரளாக பங்கேற்பது என்றும் மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லையென்றால் *27 .11 .2018* முதல் ஜாக் டோ-ஜியோ *வேலை நிறுத்தப்*போராட்டத்திற்கு* முழு ஆதரவு அளித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிதீவிரமாக பங்கேற்பது என்றும் இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.
*
2. *உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் இனி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது*
பதவி உயர்வு பெற்ற முதுகலைபட்டதாரி ( *PG* ) ஆசிரியருக்கு வழங்க இனி ஒருபோதும் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் *அனுமதிக்க விடாது.* தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.
3. உயர் நிலை - மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் *வட்டாரக் கல்வி அலுவலர்களாக (BE0) 50% விழுக்காடு வழங்கிட* தமிழக அரசையையும் கல்வித்துறையையும் இப்பொதுக்குழு வேண்டுகிறது
4.. பணி நிரவல் என்ற பெயரில் எண்ணற்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்து அதன் காரணமாக பல பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் போதிக்கவும் அறிவியல் பாடம் போதிக்கவும், வரலாறு பாடம் போதிக்கவும் ஒரு பட்டதாரி ஆசிரியர் கூட இல்லாத அவல நிலையை கல்வித் துறைக்கு வேதனையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
அனைத்து பள்ளிகளிலும் அனைத்து பாடங்களையும் போதிக்க தேவையான அளவிற்கு பட்டதாரி ஆசிரியர் களை உடனடியாக பணி நியமனம் செய்ய தமிழக அரசையும், கல்வித்துறையையும் வற்புறுத்துகின்றோம்.
5.. *மனமொத்த இடமாறுதல்* வேண்டி ஆசிரியர்கள் விண்ணப்பித்து பல மாதங்கள் ஆன பின்பும் இன்னும் *மனமொத்த இடமாறுதல் வழங்காமல்* பள்ளிக்கல்வித் துறை காலம் தாழ்த்தி வருவதை இப்பொதுக்குழு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மனமொத்த இடமாறுதலுக்கு ஆணை வழங்கிட பள்ளிக்கல்வித் துறையை வற்புறுத்துகிறது
6. *உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும் PG ஆசிரியர் பணியிடங்களும் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டு இருப்பதால் தற்போது பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி ஏற்பட்டுள்ளன. ஆகவே மீண்டும் பட்டதாரி ஆசிரியர் களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இடமாறுதல்* நடத்திட வேண்டும் என்று கல்வித்துறையை வற்புறுத்துன்றது.
7. கடந்த *மூன்று ஆண்டுகளாக வரலாறு பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படாத அவல நிலை நீடித்து வருகின்றது. இதற்கு தடையாக இருப்பதை உடனடியாக சரி செய்து வரலாறு பட்டதாரி ஆசிரியர் களுக்கு வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிட* விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு வற்புறுத்துகின்றது
மற்ற பாட ஆசிரியர்களுக்கு *வரலாறு போதிக்கும் ஆசிரியர்களுக்கும் 7 பாடவேளைகளை ஒதுக்கிட வேண்டும்* என தீர்மானிக்கிறது.
8. *வரும் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் சென்னையில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பல்லாயிரக் கணக்கில் பங்கேற்கும் அளவில் பிரம்மாண்டமான சிறப்பு மாநாட்டை நடத்துவது என்றும் அதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் . தோழமை சங்க தலைவர்களையும் அழைப்பது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.* அதற்காக 90 பேர் அசங்கிய மாநாட்டு வரவேற்புக் குழு ஒன்றையும் இப்பொதுக்குழு அமைக்கிறது.
9. *2004 - 2006 வரை* தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையும் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து *பணிவரன்முறை செய்து சேர வேண்டிய அனைத்து பனபலன்களை உடனடியாக வழங்கிட* தீர்மானிக்கிறது
10. நம்முடைய *பொதுச் செயலாளர்* அவர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பெற்றமைக்கு பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மாநில மாநாடு டிசம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது. *மாநில மாநாடு முடியும் வரை அவர் பொதுச் செயலாளராக நீடிக்க* இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. அதற்கு *பிறகு அடுத்த மாநிலப் பொ துக்குழுவில் புதிய பொதுச் செயலாளரை நியமிக்க* தீர்மானிக்கிறது
11. ஜாக் டோ-ஜீயோ 2017 வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களில் 22.08.2017 ஐ தவிர அனைத்து வேலை நிறுத்த நாட்களுக்கும் ஊதியப் பிடித்தம் இல்லாமல் ஊதியம் வழங்கப்பட்டு விட்டது. அதுவே விடுபட்ட *22. 08. 2017 ஒரு நாளுக்கு மட்டும் ஊதியம் வழங்கிட* ஆணை பிறப்பிக்குமாறு பொதுக்குழு வேண்டுகிறது.
12. இவ்வாண்டு பல *நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட அரசு உய்ர்நிலைப் பள்ளிகளுக்கு உடனடியாக கலந்தாய்வு* முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்க பொதுக்குழு வேண்டுகிறது.
13. நமது மாநிலக் கழகத்தின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்வதற்காக *உள் தணிக்கையாளர்களாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு .மோகன் அவர்களையும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.துளசிங்கம்* அவர்களையும் இப்பொதுக்குழு நியமிக்கிறது.
*தீர்மான வெளியீடு :*
*திண்டுக்கல் முனைவர்.மு .முருகேசன்*
*மாநில செய்தி தொடர்பு செயலாளர்*
*தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
*(மாநிலக் கழகம்)*