கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 4 September 2018

மாநிலச் செயலாளர் திரு.வேலூர் ஜெயக்குமார் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்து மடல்

*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
✍✍✍✍✍✍✍✍✍
*நிறுவனத்தலைவர் மதிப்புமிகு : முனைவர் :அ.மாயவன் Ex.MLC*
💐💐💐💐💐💐💐💐💐
*ஆசிரியர் தின வாழ்த்து மடல்*
✍✍✍✍✍✍✍✍✍
அறிவு விளக்கை
ஏற்றி வைக்கும்
கலங்கரை விளக்கே
உன்னை
வணங்கி மகிழ்கிறேன்🙏

ஒவ்வொரு வருடமும்
பத்து மாதம்
மாணவர்களை
செதுக்குகிறீர்கள்
தங்களின் விழிகள்
மூடாமல் ......

மாணவர்களின்
கனவுகளை
கைவசப்படுத்தி
கொடுக்க உதவும்
தூண்டுகோலாக
திகழும் - தியாகிகளே
தங்களை
வாழ்த்தி மகிழ்கிறேன்💐

பலரை அரியாசனம்
ஏற்றுகிறோம் - நம்
சிரியாசனத்தில் - கூட
அமராமல்.
திரிகள் பல
மாறிக்கொண்டிருக்கு
விளக்காய் - நாம்
மட்டும் மாறாமல் .....

தினம் தினம்
பூக்கும்
மலர்களைப்போல
உற்சாகமாய்
மாணவர்களை
பட்டை தீட்டும் – நாம்
மாலையில் கூட
சோர்ந்து விடுவதில்லை
சூரியகாந்தி போல ......

நாம் (ஆசிரியர்கள்)
ஒரு கலைசிற்பி
நாம் செதுக்கும்
ஒவ்வோர் சிலையும்
அக்கல்லை பொருத்தே
அமைகின்றது.

எத்தனை ஆயிரம்
ஆசிரியர்கள் - நாம்
ஆனால்
நம் நோக்கம்
நம் லட்சியம்
ஒன்றேதான்
என் மாணவன்
முன்னேற வேண்டும்
தேர்ச்சி பெற வேண்டும்
வெற்றிபெற வேண்டும்
ஆஹா
எத்தனை உயரிய எண்ணம்
நமக்கு - நாமல்லவா
வணக்கத்திற்குரியவர்கள்........

எத்தனை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை துன்பங்கள்
எத்தனை தொல்லைகள்
மாணவர்களிடமிருந்து
மட்டுமா - அல்ல
இந்த சமூகமும்
நம்மை விட்டு வைக்கவில்லை
இதையெல்லாம்
சட்டை செய்யாமல்
என் பணி - பணி
செய்து கிடப்பதே
என்று - தன்
கடமையில் இருந்து
தவறாமல் - உழைக்கும்
அன்பு உடன் பிறப்புக்களே
உங்களை வாழ்த்தி
வணங்குகிறேன்🙏

எத்தனை அன்பு
எத்தனை அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள்
எத்தனை ஆலோசனைகள்
மாணவர்கள்
ஏற்றுக்கொண்டாலும்
இல்லை என்றாலும்
நாம் - அவர்களை
ஊக்கப்படுத்திக் கொண்டு தானே
இருக்கின்றோம்
நீயல்லவோ
அற்புத மனிதன்
உன்னை
வாழ்த்தி மகிழ்கிறேன்💐

மெழுகுவர்த்தி
தன்னையே உருக்கி
பிறருக்கு
வெளிச்சம்
தருவது போல
நீயும்
வாழ்நாள் முழுவதும்
மாணவர்களுக்காக
தன்னையே - உருக்கி
மாணவர்களின்
வாழ்க்கையில்
தீப ஒளியை
ஏற்றிக்கொண்டிருக்கிறாயே
நீயல்லவோ
ஒளிவிளக்கு ......

நாள் முழுவதும்
சுண்ணக்கட்டியை
தேய்த்து தேய்த்து
அதன் துகள்கள்
ஒவ்வொன்றினையும்
சுவாசித்து - தன்னையே
கொஞ்சம் கொஞ்சமாக
இழந்து
கொண்டிருக்கிறாயே
உன் தியாகத்திற்கு
உண்டோ
ஈடு - இணை
இவ்வுலகில் .....

ஆசிரியர்களை
போற்றும்
இந்நாளில்
ஆசிரியர்களுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும்
பட்டதாரி ஆசிரியர்களை பாதுகாக்கும்
ஒரே தலைவன்
என் நெஞ்சமெல்லாம்
நிறைந்துள்ள
*மதிப்புமிகு : முனைவர். அ.மாயவன் Ex.MLC* அவர்களின்
வழி நின்று
என் ஆசிரிய
சொந்தங்கள் உங்கள்
அனைவரையும்
ஆசிரியர் தினத்தில்
வாழ்த்தி
மகிழ்கிறேன்
வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐

வாழ்த்தும் மகிழ்வில் .......

*சி.ஜெயக்குமார், மாநிலச்செயலாளர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் .*

No comments:

Post a Comment